Pongal Nalla Neram 2026: “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று காத்திருக்கும் தமிழர்களுக்கு, இந்த முறை ஒரு சிறிய குழப்பம் வந்திருக்கு. வழக்கமாக ஜனவரி 14-ம் தேதி கொண்டாடும் பொங்கல் விழா, இந்த ஆண்டு (2026) ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஏன் இந்த மாற்றம்? பொங்கல் வைக்க உகந்த நேரம் (Nalla Neram) எது? எமகண்டம், ராகு காலம் எப்போது? என்பது குறித்துப் பஞ்சாங்க கணிப்புகள் கூறும் துல்லியமான தகவல்களை இங்கே காண்போம் வாருங்கள்.
இம்முறை ஜனவரி 15-ல் ஏன் பொங்கல்?
சூரிய பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு மாறும் நேரமே ‘மகர சங்கராந்தி’ அல்லது தை மாதப் பிறப்பாகக் கருதப்படுகிறது. வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்கப்படி, இந்த ஆண்டு (2026) ஜனவரி 14-ம் தேதி புதன்கிழமை மதியத்திற்கு மேல் (சுமார் 03:13 PM) தான் சூரியன் மகர ராசிக்குள் நுழைகிறார்.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
சூரிய உதயத்திற்குப் பிறகு, மாலையில் தை மாதம் பிறப்பதால், அதற்கு அடுத்த நாள் சூரிய உதயத்தையே கணக்கில் கொண்டு ஜனவரி 15 (வியாழக்கிழமை) அன்று தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. எனவே, ஜனவரி 14-ம் தேதி போகிப் பண்டிகையும், 15-ம் தேதி தைப் பொங்கலும் கொண்டாட வேண்டும்.
பொங்கல் வைக்கச் சிறந்த நேரம் (Auspicious Time)
ஜனவரி 15-ம் தேதி வியாழக்கிழமை என்பதால், குரு பகவானுக்கு உகந்த நாளாக அமைகிறது. இருப்பினும் காலை நேரத்தில் எமகண்டம் வருவதால் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
சிறந்த நேரங்கள்:
-
காலை (முதல் சாய்ஸ்): 07:45 மணி முதல் 08:45 மணி வரை ஆகும். (எமகண்டம் முடிந்த பிறகு வரும் மிகச் சிறப்பான நேரம் இது).
-
நண்பகல் (இரண்டாவது சாய்ஸ்): 10:35 மணி முதல் பிற்பகல் 01:00 மணி வரை ஆகும். (சுக்ர ஹோரை மற்றும் புதன் ஹோரை வரும் நேரம்).
கிராமப்புற வழக்கம்:
பொதுவாகக் கிராமங்களில் சூரியன் உதிக்கும் நேரமான காலை 6:00 மணிக்கு முன்பாகவே (பிரம்ஹ முகூர்த்தத்தில்) வாசலில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இதற்குத் தோஷம் கிடையாது. ஆனால், 6 மணிக்கு மேல் வைப்பவர்கள் எமகண்டத்தைத் தவிர்ப்பது நல்லது.
தவிர்க்க வேண்டிய நேரங்கள் இது:
ஜனவரி 15 (வியாழன்) அன்று பொங்கல் வைக்கும்போது, மறந்தும் இந்த நேரங்களில் வைத்துவிடாதீர்கள்:
-
எமகண்டம்: காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை. (மிகவும் முக்கியம்).
-
ராகு காலம்: பிற்பகல் 01:30 மணி முதல் 03:00 மணி வரை.
-
குளிகை: காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை.
எப்படி வழிபட வேண்டும்:
-
திசை: வீட்டு வாசலில் கிழக்கு நோக்கி, சூரியனைப் பார்த்தவாறு புது அடுப்பு கூட்ட வேண்டும்.
-
பொங்கலோ பொங்கல்: புதுப் பானையில் புத்தரிசி, வெல்லம், பால், நெய் சேர்த்துப் பொங்கல் வைக்க வேண்டும். பானையில் பால் பொங்கி வழிந்து வரும்போது, குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து “பொங்கலோ பொங்கல்” என்று குலவையிட்டு மகிழ்வது மரபு.
-
படையல்: தலைவாழை இலையில் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து மற்றும் 7 வகை நாட்டுக்காய்கறிகள் கலந்த கூட்டு (தாளகம்) வைத்துச் சூரியனை வழிபட வேண்டும்.
அடுத்தடுத்த பண்டிகைகள்:
-
ஜனவரி 16 (வெள்ளி): மாட்டுப் பொங்கல்.
-
ஜனவரி 17 (சனி): காணும் பொங்கல்.

பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
For More Job Info:
Name: Diyan
Role: Content Publisher
Expertise: Education, Government Jobs, Public Schemes, News
Language: Tamil & English





