Whatsappக்கு வந்த சோதனை! “பிடிக்கவில்லை என்றால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்” – முழு விவரம் இதோ!

Supreme Court Warns Meta Whatsapp 2026: இந்தியாவில் சுமார் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் ஒரு செயலியாக வாட்ஸ்அப் (WhatsApp) உருவெடுத்துள்ளது. இந்நிலையில், அதன் தாய் நிறுவனமான மெட்டா (Meta) இந்தியச் சட்டங்களுக்கு முரணாகச் செயல்படுவதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், இந்திய உச்ச நீதிமன்றம் வரலாறு காணாத ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Supreme Court Warns Meta Whatsapp 2026
Supreme Court Warns Meta Whatsapp 2026

“இந்திய சட்டங்களை மதிக்க முடியாது என்றால், நீங்கள் தாராளமாக நாட்டை விட்டு வெளியேறலாம்” என்ற நீதிபதிகளின் கருத்து தற்போது இணையதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

தனியுரிமைக் கொள்கை சர்ச்சை: பின்னணி என்ன?

2021-ஆம் ஆண்டு வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய தனியுரிமைக் கொள்கையை (Privacy Policy) அறிமுகப்படுத்தியது. இதன்படி, வாட்ஸ்அப் பயனர்களின் தகவல்களை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற மெட்டா நிறுவனத்தின் பிற தளங்களுடன் விளம்பர நோக்கங்களுக்காகப் பகிர முடிவு செய்யப்பட்டது.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join

இதற்கு இந்தியப் போட்டி ஆணையம் (CCI) கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மெட்டா நிறுவனத்திற்கு ₹213 கோடி அபராதமும் விதித்தது. இந்த அபராதத்தை எதிர்த்து மெட்டா நிறுவனம் மேல்முறையீடு செய்தபோதுதான் உச்ச நீதிமன்றத்தின் இந்தச் சாட்டைடி கருத்து வெளியாகியுள்ளது.

ஐரோப்பாவுக்கு ஒரு நீதி? இந்தியாவுக்கு ஒரு நீதியா?

இந்த வழக்கின் விசாரணையின்போது, மெட்டா நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றும் தரவுப் பாதுகாப்பு முறைகளுக்கும், இந்தியாவில் பின்பற்றும் முறைகளுக்கும் இடையே உள்ள பாகுபாட்டை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

ஐரோப்பாவில் மிகவும் கடுமையான தனியுரிமைச் சட்டங்கள் இருப்பதால் அங்குப் பயனர்களின் தகவல்களைப் பகிராத வாட்ஸ்அப், இந்தியாவில் மட்டும் ஏன் அத்தகைய கொள்கையைத் திணிக்கிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்திய மக்களின் தனியுரிமை என்பது எந்தவொரு பன்னாட்டு நிறுவனத்தின் லாபத்தை விடவும் மேலானது என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மக்களின் தரவுகளுக்கு ஆபத்தா?

பயனர்களின் தனிப்பட்ட மெசேஜ்கள் ‘எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்’ (End-to-End Encryption) முறையில் பாதுகாக்கப்பட்டாலும், நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள், எவ்வளவு நேரம் பேசுகிறீர்கள், உங்கள் இருப்பிடம் போன்ற ‘மெட்டா டேட்டா’ தகவல்கள் வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இதனைத் தடுக்கும் நோக்கில், வாட்ஸ்அப் பயனர்களின் தகவல்களை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மெட்டா நிறுவனத்தின் பிற விளம்பரத் தளங்களுடன் பகிரக் கூடாது என்று இந்தியப் போட்டி ஆணையம் ஏற்கனவே தடை விதித்துள்ளது.

நிபந்தனைகளை ஏற்க வேண்டிய கட்டாயம்

உச்ச நீதிமன்றத்தின் இந்த எச்சரிக்கை, இந்தியாவில் செயல்படும் அனைத்து வெளிநாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.

இந்தியச் சந்தை மிகப்பெரியது என்பதால், மெட்டா நிறுவனம் அவ்வளவு எளிதாக இந்தியாவை விட்டு வெளியேறாது. ஆனால், இந்தியப் பயனர்களின் தரவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனது கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு அந்த நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.

Supreme Court Warns Meta Whatsapp 2026
Supreme Court Warns Meta Whatsapp 2026

தகவல் தொழில்நுட்பத் துறையின் புதிய சட்டங்கள் மற்றும் உங்கள் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துகொள்ள எங்களது இணையதளத்தைத் தொடர்ந்து பின்தொடருங்கள்.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join

For More Info:

Leave a Comment