TN Govt New Ration Card Important Updates 2026: “புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து மாதக்கணக்கில் காத்திருக்கிறீர்களா? அல்லது புதிய அட்டைக்கு எங்கே சென்று விண்ணப்பிப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளீர்களா?” உங்களுக்காகவே தமிழக அரசு இரண்டு மகிழ்ச்சியான அறிவிப்புகளை தற்போது வெளியிட்டுள்ளது.

ரேஷன் கார்டு தொடர்பான மக்களின் குறைகளைத் தீர்க்கவும், புதிய அட்டைகளை விரைவாக வழங்கவும் மாவட்ட வாரியாகச் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இது பற்றியும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை குறித்தும் இங்கே விரிவாகக் காண்போம் வாருங்கள்.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
குட் நியூஸ் 1: காஞ்சிபுரம் மாவட்ட முகாம் (ஜனவரி 24)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட பொது விநியோகத் திட்டக் குறைதீர் முகாம்கள், வரும் ஜனவரி 24, 2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முகாம் எங்கே நடைபெறுகிறது?
கீழே குறிப்பிடப்பட்டுள்ள கிராமங்களில் இந்தச் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது:
-
காஞ்சிபுரம் வட்டம்: குண்டு குளம் (Kundukulam).
-
உத்திரமேரூர்: கடல்மங்கலம் (Kadalmangalam).
-
வாலாஜாபாத்: ஆர்ப்பாக்கம் (Arpakkam).
-
திருப்பெரும்புதூர்: சந்தவேலூர் (Santhavelur).
-
குன்றத்தூர்: வழுதலம்பேடு (Vazhuthalampedu).
என்னென்ன செய்யலாம்?
இந்த முகாமில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்தல், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் மற்றும் ‘தாயுமானவர்’ திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரக் கோருதல் போன்ற அனைத்துச் சேவைகளையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
குட் நியூஸ் 2: ராணிப்பேட்டை சிறப்பு முகாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில், புதிரை வண்ணார் (SC) சமூக மக்களுக்கான சிறப்பு முகாம்கள் நேற்று (ஜனவரி 13) நடைபெற்றன. இதில் புதிய ரேஷன் கார்டு, சாதிச் சான்றிதழ், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுபோன்ற சிறப்பு முகாம்கள் உங்கள் மாவட்டத்திலும் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
50,000 பேருக்கு கார்டு ரெடி:
தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்திருந்தனர். இதில் தகுதியான 50,000 பேருக்கு ஏற்கனவே கார்டுகள் வழங்கப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ள விண்ணப்பங்கள் மீதான பரிசீலனைத் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
முகாமிற்குச் செல்ல முடியாதவர்கள், வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் மிக எளிதாக விண்ணப்பிக்கலாம்.
-
இணையதளம்:
www.tnpds.gov.inஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். -
புதிய அட்டை: முகப்புப் பக்கத்தில் வலதுபுறம் உள்ள “புதிய மின்னணு அட்டைக்கு விண்ணப்பிக்க” (Apply for New Smart Card) என்பதை கிளிக் செய்யவும்.
-
விவரங்கள்: குடும்பத் தலைவர் பெயர், முகவரி, மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களைப் பிழையின்றிப் பதிவிடவும்.
-
ஆவணங்கள்: இருப்பிடச் சான்று (ஆதார் அட்டை, கேஸ் பில், வீட்டு வாடகை ஒப்பந்தம் இதில் ஏதேனும் ஒன்று) மற்றும் குடும்பத் தலைவரின் புகைப்படத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.
-
அட்டை வகை: அரிசி அட்டை (Rice Card), சர்க்கரை அட்டை (Sugar Card) அல்லது பொருள் இல்லாத அட்டை (No Commodity Card) என்பதில் உங்களுக்குத் தேவையானதைத் தேர்வு செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பித்த பிறகு உங்களுக்குக் கிடைக்கும் ‘குறிப்பு எண்ணை’ (Reference Number) வைத்து விண்ணப்பத்தின் நிலையை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளலாம்.

முக்கிய தகவல்:
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஜனவரி 24-ம் தேதி மறக்காமல் முகாமிற்குச் செல்லுங்கள். மற்ற மாவட்டத்தினர் ஆன்லைன் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாகவோ இன்றே விண்ணப்பியுங்கள். நன்றி
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
For More Job Info:
Name: Diyan
Role: Content Publisher
Expertise: Education, Government Jobs, Public Schemes, News
Language: Tamil & English





